கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

வெள்ளி, 31 டிசம்பர், 2010

தமிழ் பலகை: யோக முத்திரைகள்


தமிழ் பலகை: யோக முத்திரைகள்

ஏசுவின் வரலாற்று அடிப்படையும் அப்பாலும்




ஏசுவின் வரலாற்று அடிப்படையும் அப்பாலும்
முன்னர் ஏசுவின் பிறப்பு கதையில் பின்னாலிருக்கும் தொன்ம புனைவின் தன்மைகளையும் காரணிகளையும் பார்த்தோம்ன். அடுத்ததாக கிறிஸ்தவ விவிலியத்தில் நாம் முக்கியமாக காணும் ஒரு நிகழ்ச்சி யோவான் எனும் யூத ஞானி ஏசுவுக்கு சடங்கு முழுக்கு அளிக்கும் நிகழ்ச்சி ஆகும். கிறிஸ்தவ விவிலியத்தின் புராண தன்மை பூரணமாக எவ்வித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படும் தருணமாக இதனை நாம் கருதலாம். ஆனால் பொதுவாக யோவான் ஒரு வரலாற்று பாத்திரமாக கருதப்படுகிறார். இதிலும் மாறுபடும் வரலாற்றாசிரியர்கள் இல்லாமலில்லை. என்ற போதிலும் இந்த யோவான் குறித்து பொதுவாக கிறிஸ்தவ விவிலியத்துக்கு வெளியில் நாம் அறியும் வரலாறு கிறிஸ்தவ விவிலியம் கூறும் வரலாற்றிலிருந்து மாறுபட்டு உள்ளது என்பதும் முக்கியமான விசயமாகும். முதலில் இந்த ஸ்நானன் யோவான் குறித்து நான்கு ஏசு கதைகளும் கூறுவதைக் காணலாம்.




கிறிஸ்தவ சிறுவர் இலக்கியத்தில் யோவான் ஸ்நானன்






கத்தோலிக்க காலண்டர் ஓவியத்தில் யோவான் ஸ்நானன்



மத்தேயு 3 ஆம் அதிகாரம் முழுக்க (17 வசனங்கள்) யோவான் ஸ்நானன் குறித்ததே ஆகும். மார்க்கு எழுதிய ஏசுகதையில் ஒன்றாம் அத்தியாயத்தில் இரண்டாம் வசனம் தொடங்கி
பன்னிரெண்டாம் வசனம் வரை யோவான் அளிக்கும் ஞான ஸ்நானம் குறித்ததாகும். லூக்கா ஒன்றாம் அதிகாரத்தில் யோவானின் பிறப்பு குறித்து பேசப்படுகிறது. பின்னர் மூன்றாம்
அத்தியாயத்தில் 2 இலிருந்து 22 ஆம் வசனம் வரைக்குமாக யோவான் ஏசுவுக்கு ஞான ஸ்நானம் அளித்தது குறித்து கூறுகிறது. பின்னர் யோவான் எழுதிய ஏசு கதையில் ஒன்றாம்
அத்தியாயத்தின் பல வசனங்களில் நாம் யோவான் ஏசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த நிகழ்ச்சி கூறப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இதில் நாம் மத்தேயு மற்றும் லூக்கா எழுதிய
விவரணங்களில் காண்பது என்னவென்றால் யோவான் தன்னிடம் ஞானஸ்நானம் பெற வரும் யூதர்களை வசையாடுகிறான். ஆனால் மார்க்கில் இது இல்லை. யோவானிலோ ஏசுவை
தேவ ஆட்டுக்குட்டி என யோவான் கூறுகிறான் இது மற்ற ஏசு கதைகளில் இல்லை. ஆனால் இந்த நான்கு கதைகளுக்கும் பொதுவானது என்னவென்றால் யோவான் நதியில்
ஞானஸ்நானம் அளிக்கிறான். அதை ஏசு வாங்கும் போது பரிசுத்த ஆவி புறா/பறவை வடிவில் இறங்கிட வானிலிருந்து நீர் என்னுடைய தேவகுமாரன் என ஒரு பிரகடனம்
உண்டாகிறது.





இயேசு ஞானஸ்நானம் பெற்று ஜலத்திலிருந்து கரையேறினவுடனே இதோ வானம் அவருக்கு என்று திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல் இறங்கி தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. (மத்தேயு 3:16-17)


அவர் ஜலத்திலிருந்து கரையேறின உடனே வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். அன்றியும் நீர் என்னுடைய நேச குமாரன் உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. (மாற்கு 1:10-11)


ஜனங்களெல்லோரும் ஞானஸ்நானம் பெற்ற போது இயேசுவும் ஞான ஸ்நானம் பெற்று ஜெபம் பண்ணுகையில் வானம் திறக்கப்பட்டது. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப் போல் அவர் மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி நீர் என்னுடைய நேசகுமாரன் உம்மில் பிரியமாயிருக்கிறேன் என உரைத்தது. (லூக்கா 3:21-22)


நானும் இவரை அறியாதிருந்தேன். இவர் இஸ்ரவேலருக்கு வெளிப்படும் பொருட்டாக நான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கவந்தேன் என்றான். பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்து இறங்கி இவர் மேல் தங்கினதைக் கண்டேன். (யோவான் 1:31-32)

இந்த தரவுகள் அனைத்திலும் நாம் காணும் விசயம் முன்பு ஏசுவின் பிறப்பு கதையில் கண்டது போன்றதொரு ஒழுங்கினை நமக்கு தருகிறது. அதாவது மத்தேயுவிலும் லூக்காவிலும் யோவான் யூதர்களை காரணமின்றி அவர்களின் கெட்டத்தன்மைக்காக திட்டுகிறான். இந்த இரண்டு ஏசுகதைகளுமே ஏசுவினை யூதத்தின் வாக்களிக்கப்பட்ட மெசையாவாக்கிட விரும்பி புனைவு வம்சாவளிகளை முன்வைத்தவை. எனவே இந்த யூத எதிர்ப்பு வசவு என்பது ஏசுவை மறுதலிக்கும் யூதர்களுக்கு மேலாக ஒரு வெறுப்பினை கக்கும் முயற்சிகளாகவே காணப்பட வேண்டும். ஆனால் யோவான் என்று ஒரு யூத மெய்ஞானி இருந்தது உண்மை என்பது தெளிவு. அத்துடன் அவனுக்கு யூத சமுதாயத்தில் ஒரு முக்கிய இடமும் இருந்தது. அவன் நீர் சடங்குகளை செய்பவனாக இருந்திருக்கிறான் என்பதால் இந்த யோவான் எனும் பெயர் அவனது இயற்பெயராக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏன்?







கிமு 2300 ஆம் ஆண்டு சுமேரிய உருளை சித்திர 'சூரிய உதயம்' எனும் தொன்மக்காட்சியில் நீர் கடவுளின் இறை தூதன் யோவான் ஸ்நானனின் prototype

என்கி (Enki) என்பது சுமேரிய நீர் கடவுள். இக்கடவுளின் இரு சின்னங்கள் மீனும் ஆடும் ஆகும். ( இந்த இரண்டு சின்னங்களும் பின்னர் கிறிஸ்தவ குறியீட்டிலும் முக்கிய இடத்தை
வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.) பிற்கால பாபிலோனிய எழுத்துக்களில் இந்த நீர் தெய்வம் இயா (Ea) எனக்குறிப்பிடப்படும். இந்த இயா தெய்வம் தன் தூதுவர்களை உலகெங்கும் அனுப்புகிறது. இந்த தூதர்களில் முதன்மையானவன் ஓயன்னஸ் (Oannes) என்பவர் ஆவார். இவர் சுமேரிய சப்தரிஷிகளுள்* முதன்மையானவர் ஆவார். இந்த ஓயன்னஸ் நீர் சடங்குகளுடன் தொடர்புடையவர்.மீன் தோலை அணிந்து எந்த உணவும் அருந்தாமல் மக்களுக்கு நற்போதனைகள் செய்த இந்த இறைதூதரை குறித்து கிமு மூன்றாம் நூற்றாண்டு ஹெலனிய பாபிலோனிய இலக்கியம் பேசுகிறது. இதுவே ஹீப்ருவில் ஜோகன்னன் ஆகி பின்னர் இயோன்னஸ் ஆகி ஆங்கிலத்தில் ஜான் ஆகிற்று. ஈஸின்ஸ் போன்ற அதீத மறைஞான துறவொழுக்க இயக்கங்கள் யூத சமுதாயத்தில் சமுதாயத்திலிருந்து ஒதுங்கி வாழ்ந்தவை ஆகும். இவற்றின் சடங்குகள் பெரும்பாலும் பண்டைக்கால சுமேரிய மற்றும் பெர்சிய தொன்மங்களால் தாக்கம் கொண்டிருந்தன. மேலும் என்கி எனும் நீர் தெய்வ வழிபாட்டினைக் காட்டிலும் பிரதானம் அடைந்தது சூரியதெய்வ வழிபாடாகும். ஏசு தொன்மம் சூரிய கடவுளுடன் இணைக்கப்பட்ட போது யோவான் எனும் நீர் சடங்குகள் கொண்ட யூத துறவியின் பெயர் நிச்சயமாக ஏசுவினைக் காட்டிலும் யூதர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. இதனையே மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதுதான் 'நீர் கடவுளின்' தூதன் ஏசு எனும் சூரியக்கடவுளின் மேன்மையை முன்னறிவிக்கும் கதை. சூரியன் நீரிலிருந்து எழும் மிகப்பழமையான பிம்பத்தின் அக்காலத்திய நெகிழ்ச்சியான தொன்மங்கள் உறைய வைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதே ஏசுவின் நீர்முழுக்கு சடங்கு குறித்த கதையாடல் எனவும் அறிஞர்கள் கூறுவர்.



எனில் பறவை வடிவ பரிசுத்த ஆவி? அதன் தொன்ம வேர்களையும் காணலாம். (தொடரும்)




குறிப்பு

*

(ஆம்...உலக தொன்மங்கள் ஒன்றொக்கொன்று மிகவும் தொடர்புகளுடையவையே ஆகும். இந்திய சப்தரிஷிகள் தொன்மமும் சரி சுமேரிய சப்தரிஷி தொன்மமும் சரி எதிலிருந்து எது வந்திருக்கலாம் என தெரியாத அளவு பழமையானவை. அப்பு என்பது நீரினை குறிக்கும் பாரத பதம் சுமேரியத்திலும் அபு என்பது நீர் என்பதனைக் குறிக்கும். மேலும் ஓயன்னஸுக்கும் விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்சாவதாரத்துக்கும் கூட இணைகளை காண முடியும். நிற்க. பாரத மரபில் புராணங்களின் வரலாற்றுத்தன்மைக்கு பொதுவாக வெகுசிலரைத்தவிர யாரும் முக்கியத்துவம் தருவதில்லை, ஏசுவின் புராணத்தன்மைக்கு வெகுசிலரைத்தவிர பெரும்பாலான கிறிஸ்தவர்கள் முக்கியத்துவம் தராமல் வரலாற்றுத்தன்மையை நம்புவது போல. மாறாக விவிலியம் முழுவதும் வியாபித்திருக்கும் தவிர்க்கமுடியாத புராணத்தன்மை ஏசுவின் உண்மை இயற்கையை காட்டுகிறது. விவிலியம் சித்திரிக்கும் ஏசு வரலாற்றில் வாழ்ந்திடவில்லை என்பதே அது

ஸ்ரீபைரவர் வழிபாடு 



எல்லா சிவன் கோவில்களிலும் விநாயகர், முருகன் சன்னதி, அம்பாள் சன்னதி இருக்கும். அதே போன்று நவக்கிரஹ சன்னதியும் காணப்படும். இன்னொரு முக்கியமான சன்னதியாக விளங்குவது ஸ்ரீபைரவர் சன்னதியாகும். அதுவும் சற்று ஒதுக்குப்புறமாக, தனியாக உள்ளடங்கியே பெரும்பாலான கோயில்களில் காணப்படும். மேலும் சில கோயில்களின் காவல் தெய்வமாக விளங்குவதும் ஸ்ரீபைரவர் தான்! பொதுவாக வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் பைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி என்ற வரிசையிலும் இருப்பார்கள். சில ஆலயங்களில் நவச்கிரக சன்னதிக்கு அருகிலும் பைரவர் சன்னதி இருக்கும்.



கால பைரவர்



ஆனால் சங்க காலத்திலோ, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களிலோ பைரவரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. (நான் தேடிப் பார்த்தவரை கிடைக்கவில்லை)

அநேகமாக இந்த பைரவ வழிபாடு முதன் முதலில் வட இந்தியாவில் தோன்றிப் பின்னரே இங்கு பரவியிருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக ஆதிசங்கரரின் அவதாரத்திற்குப் பின்னரே இந்த பைரவ வழிபாடு ஏற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. அவர் தாம் முதன் முதலில் வழிபாட்டு முறைகளைப் பிரித்து ஷண்மத ஸ்தாபனத்தை உருவாக்கியவர். அவற்றுள் ஒன்றான சாக்த வழிபாட்டில் உள்ளடங்கி உள்ளது தான் ஸ்ரீ பைரவ வழிபாடாகும். பைரவர் தம் பெருமையைப் புகழ்ந்து கால பைரவாஷ்டகத்தையும் ஸ்ரீ சங்கரர் பாடியுள்ளார்.




கால பைரவர் – காசி
வட இந்தியாவில், காசியில் கால பைரவர் சன்னதி உள்ளது. இங்கு வந்து சென்று, வழிபட்டு கறுப்புக்கயிறு கட்டிக் கொண்டால் திருஷ்டி தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இவரது திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. இவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார். காசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு கள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது ஒரு நம்பிக்கையாக உள்ளது. காசியில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட சனீஸ்வரன், காசியின் காவல் தெய்வமான பைரவரை எண்ணி தவம் புரிந்து பிறகு மெய்ஞானம் பெற்றார் என்ற ஒரு கருத்தும் உண்டு. சனைச்சரனுக்கு குரு கால பைரவர் தான். இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள், சனி தோஷங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உண்டு.



பைரவர் சிவனின் ஒரு அவதாரம் என்ற கருத்தும் உள்ளது. மகன்மை முறை உடையவர் என்ற கருத்தை கிருபானந்த வாரியார் ஒரு சொற்பொழிவில் கூறியிருக்கின்றார். சிவனின் சூலத்திலிருந்து தோன்றியவர் என்றும் கூறப்படுகின்றது. மேலும் கந்த புராணம், காசி புராணம், கடம்பவனப் புராணம் போன்ற, பிற்காலத்தில் தோன்றிய புராண நூல்களிலே தான் பைரவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எனவே இதிலிருந்து பொதுவாக பைரவர் வழிபாடு என்பது பிற்காலத்தில் தான் தமிழ் நாட்டில் வேரூன்றியிருக்க வேண்டும் என்ற முடிவிற்கே வர வேண்டியுள்ளது. முதலில் வட நாட்டில் தோன்றிப் பரவி பின்னரே தமிழ்நாட்டில் இவ்வகை வழிபாடு பரவியிருக்கக் கூடும். ஆலயத்தில் இறுதி பூசை பைரவருக்கு நடந்தாலும் முதன்மையானவர் அவர் தான். இத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவர் குறித்து பல்வேறு வரலாறுகள் கூறப்படுகின்றன.

முதல் பைரவர்:


பைரவ மூர்த்தங்களில் மொத்தம் 108 வகைகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. பைரவரின் 64 அம்சங்களில் எட்டு அம்சங்கள் விசேஷமாக கருதப்படுகிறது. அவற்றில் முதன்மையானதும், மூலமானதாகவும் விளங்குவது ஆதி பைரவராகும்.



இத்தகைய ஸ்தோத்திரங்களினால் நம் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளையும் என்பது ஐதீகம். கொடிய வல்வினைகளையும் நொடியில் போக்கும் தன்மை கொண்டவை இந்த ஸ்தோத்திரங்கள். ஆனால் இவற்றைத் துதிக்கும் முன் கீழ்கண்டவை சரியாக இருந்தால்தான் பூரண பலன் கிட்டும்.

1. இவற்றைத் துதிப்பவர்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

2. தினம்தோறும் குளித்து முடித்து விட்டு பக்தியுடனும் ஆச்சாரத்துடனும் இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லி இறைவனைத் தொழ வேண்டும்.

3. புறதூய்மையோடு அகத்தூய்மையும் மிக அவசியம்.

4. தொடர்ந்து 48 நாட்கள் தடையில்லாமல் நம்பிக்கையோடு சொல்லி வர பலன் நிச்சயம்.

5. மந்திரங்களை சரியாக உச்சரிக்க இயலாதவர்கள் குருமார்கள் மூலம் சரியான உச்சரிப்பைக் கேட்டறிந்து அதன் படி பாராயணம் செய்யவும்.



இனி பாராயண மந்திரங்கள்





காசி கால பைரவர்




1. ஆதி சங்கரர் அருளிய கால பைரவாஷ்டகம்

தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்
ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..

புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .
வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்
கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்
நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .
ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்
த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

பல ச்ருதி ..
காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்
ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்

இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம்
ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..

2. ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்

ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !

சூல ஹஸ்தாய தீமஹி !

தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!



ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே

ஸ்வாந வாஹாய தீமஹி

தந்நோ பைரவ: ப்ரசோதயாத்



ஓம் திகம்பராய வித்மஹே

தீர்கதிஷணாய தீமஹி

தந்நோ பைரவ: ப்ரசோதயாத்



3. சொர்ணாகர்ஷண பைரவ மந்திரம்



ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்

ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய

அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய

ஸ்வர்ணாகர்ஷண பைரவாய

மம தாரித்தர்ய வித்வேஷணாய

ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:



4.ஸ்ரீ பைரவ த்யானம்



ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்

ரக்தாங்க தேஜோமயம்

ஹஸ்தே சூலகபால பாச டமரும்

லோகஸ்ய ரக்ஷா கரம்

நிர்வாணம் ஸுநவாகனம்

திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்

வந்தே பூத பிசாச நாதவடுகம்

ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .



எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்யும் தன்மை மிக்க ஸ்ரீ பைரவரை முறைப்படித் தொழுது வணங்க நம் தீரா வினைகள் அனைத்தும் தீரும்

திங்கள், 13 டிசம்பர், 2010

பௌத்த அண்டவியல் - தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia)


பௌத்த அண்டவியல் - தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia)

கோடிஸ்வரனை ஆண்டி ஆக்கும் யோகம்#1420


கோடிஸ்வரனை ஆண்டி ஆக்கும் யோகம்#1420

நவரத்தினங்கள் - தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia)


நவரத்தினங்கள் - தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia)

அது வேறு உலகம்


அது வேறு உலகம்

வெள்ளி, 3 டிசம்பர், 2010

உஜிலாதேவி: மனிதனை தேடி கடவுள் வரலாம்

உஜிலாதேவி: மனிதனை தேடி கடவுள் வரலாம்: " அன்று சங்கடகர சதுர்த்திதி விநாயகருக்கு பூஜை செய்துவிட்டு அமர்ந்திருந்தேன் நமது சிஷ்யர்கள் எல்லோருக்கும் அந்த நிகழ்வு அதிசயமாகப் பட்டிரு..."