கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

புதன், 29 ஜூன், 2011

யேசுநாதரை சிலுவையில் அறைய பயன்படுத்தப்பட்ட ஆணிகள்




யேசுநாதரை சிலுவையில் அறைய பயன்படுத்தப்பட்ட ஆணிகளில் இரண்டை எருசலேமில் உள்ள 2000 ஆண்டுகள் பழைமையான மயானம் ஒன்றில் இருந்து மீட்டு எடுத்து உள்ளார் என்று அறிவித்து உள்ளார் உலகப் பிரசித்தி வாய்ந்த ஆய்வாளர்களில் ஒருவரான Simcha Jacobovici.


இந்த அறிவிப்பு வரலாற்று அறிஞர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் இம்மயானத்தில் இருந்து பிரேதப் பெட்டிகள் போன்ற பெட்டிகளை 20 வருடங்களுக்கு முன்னர் மீட்டு இருந்தார்.

இவற்றுக்குள் மனித எலும்புக் கூடுகள் இருந்தன.

இரு பெட்டிகளில் காய்பா என்கிற பெயர் எழுதப்பட்டு இருந்தது.

கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாம் பகுதி புதிய ஏற்பாட்டு.

புதிய ஏற்பாட்டின்படி யேசுநாதரை படுகொலை செய்கின்றமைக்கு முன் நின்று செயல்பட்ட தலைமை யூத குருவின் பெயர் காய்பா.

யேசுவை சிலுவையில் அறையப் பயன்படுத்தி இருந்த ஆணிகளை யூதர்களின் தலைமை மத குருவான காய்பாவின் உடலை அடக்கம் செய்த இப்பெட்டிகளுக்குள் வைத்து இருக்கின்றனர் என்று அடித்துக் கூறுகின்றார் ஆய்வாளர்.

யேசுநாதர் உயிருடன் இருந்தபோது ஏராளமான அற்புதங்களை செய்து இருந்தார்.

யேசுவின் அற்புத சித்திகளை மரணத்தின் பின்னரான வாழ்வில் அடைகின்றமைக்காக காய்பா திட்டமிட்டு இருந்தான் என்றும் இத்திட்டத்துக்கு அமையவே யேசுவை சிலுவையில் அறையப் பயன்படுத்தப்பட்ட ஆணிகள் காய்பாவின் உடலத்துடன் புதைக்கப்பட்டன என்றும் விளக்கம் கொடுக்கின்றார்

மரணம் வரும் நிலை...?









பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை. ஆனால், இன்னும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நடக்கும் எந்த விஷயங்களும், நம் கையில் இல்லை. எல்லாம் மாயை என்கிறார்களே , அதைப் போல - காலம் நம்மை வைத்து ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகிறது என்பதே உண்மை. மனித முயற்சிகள் இருப்பதற்கும், அவன் தலை விதி ஒத்துழைக்க வேண்டும். என்கிறார்கள். உங்கள் வாழ்வில் நடைபெறும் எந்த ஒரு முக்கியமான செயலுக்கும் , உங்கள் செயல் வினைகளே - பின்னிருக்கும். நல்ல படியாக யோசித்து நடந்து இருந்தால் , எத்தனையோ இழப்புகளை நீங்கள் சரி செய்து இருக்கக் கூடும்.

நல்ல மனதுடன், அடுத்தவருக்கு துன்பம் இழைக்காது - ஒரு நிம்மதியான வாழ்வு வாழ முடிந்தாலே , உங்களுக்கு அந்த இறைவனின் ஆசி உண்டு என்று நம்புங்கள். அப்படி இருக்க முடியவில்லை என்றால் , முறையான இறை வழிபாடு ஆரம்பியுங்கள். நாம் தான் அந்த பரிகாரம் செய்து விட்டோமே, இறைவனை வழிபடுகிறோமே இன்னும் அந்த இறைவன் கருணை காட்ட வில்லையே என்று உடனடி பலனை எதிர் பார்க்காதீர்கள். முறையான இறை வழிபாடு என்பது , ஒரு மரத்தை நட்டி - அதற்க்கு நீர் ஊற்றி , உரம் போட்டு வருவதற்கு ஒப்பானது. அதி விரைவில் , உங்களுக்கு அதற்குரிய பலன்கள் கிடைக்கும். ஒரு சந்ததிக்கே அதற்குரிய பலன்கள் கிடைக்கும்.

ஆண்டவன் அருளால் , எனக்கு தனிப்பட்ட முறையில் எவ்வளவோ நல்ல சம்பவங்கள் நடந்துள்ளன. வாழ்க்கை முழுவதும் வேதனைப் பட்டு இருக்க வேண்டிய சில சம்பவங்களில் மயிரிழையில் தப்பித்து , ஆசுவாசப் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறேன். இதற்க்கு பின்னணியில் இருந்தது வெகு நிச்சயமாக அந்த ஆண்டவன் அனுக்கிரகம் தான். அந்த சக்தியின் மேல் எனக்கு இருந்த நம்பிக்கை , முழு மனதுடன் கூடிய வழிபாடு, சரணாகதி.

அதனால் , கொஞ்சம் கூட நம்பிக்கையை தளர விடாது , உங்கள் மனதை இன்னும் பலப்படுத்துங்கள். நிச்சயம் கருணைமழை பொழியும்.

மரணம் ஒருவருக்கு இயற்கையில் எப்போது நெருங்க்குகிறது என்பதை - அகத்திய மாமுனிவரின் - நயனவிதி கூற்றின்படி , மரணத்தை நெருங்கியவர்கள் உடலில் என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்று சொன்னவற்றில் ஒரு சில தகவல்கள் :

"நாக்குச் சிவந்து முன்பிறந்த
நன்னீரி னிறம்போல் சிவந்திருக்கும்
தேக்கிக் காயும் தாகமுண்டு
தெளிந்தே வேர்வு சிகமென்னே
ஊக்கி உடலும் நொந்திருக்கும்
உலகோர் அறிய உரைத்தோம்
நாம் பாக்குத் தின்னும் துவர்
வாய் பரிந்தே நாளும் ஏலேன்னே"




நாக்கு சிவத்து மூளைக் கட்டுக்கள் முள்போலத் தோன்றி இரத்தம் போலச் சிவந்திருக்கும், காய்ச்சல் குறையாமல் தகிக்கும், அளவுக்கதிகமான தாகம் இருக்கும், உடல் வியர்க்கும் , உடல் முழுதும் வலிப்பது போல் இருக்கும் , பாக்கு தின்பது போல நாக்கில் துவர்ப்புச்சுவை தெரியும், இந்த அறிகுறிகள் தெரிந்தால் ஏழு நாளில் உயிர் துறப்பார்கள் என்று உலகத்தவர்கள் தெரிந்துகொள்ள சொல்கிறேன்.


"சிவேத சிவக்கச் சுரமுண்டாம்
சிதற வேர்வை மறுமையுண்டு
நீத நாக்கு பசுத்து முள்ளு
நிறைந்தே வெடித்து ரோகமுண்டாம்
ஓதத்தத் தொண்டை நேரிகுரலாம்
ஒளிசெர்நாளும் பதினைந்தாம்
நாதப் பண்சொல் மொழிமடவாய்
நாடிக் கொள்வாய் நாள்குறியே"


உடல் சிவந்து காணப்படும் சுரம் உண்டாகி , வியர்வை பெருகும், நாக்கு நிறம் மாறி முள் போல் முளைகள் நிறைந்து வெடித்து காணப்பட்டு அதிக வேதனை தரும், தொண்டை இறுகி குரல் மாறிவிடும், நாத மொழி பேசும் பெண்ணே இந்த அறிகுறிகள் கண்டால் பதினைந்து நாளில் மரணம் என்று அறிந்து கொள்.


"எண்ணியஅவத்தை சொல்வேன்
இனியகை மார்பும் மூக்கும்
நண்ணிய செவியினோடு
நலம்பெற குளிர்ந்து காட்டி
திண்ணமா உச்சி யங்கி
யாயிடிச் சிலேத்தும மோடி
மண்ணினிக் கடிகை ஐந்தில்
மரணமேன்றறிந்து சொல்லே"

கை, மார்பு, மூக்கு, காது, முதலான உறுப்புக்கள் குளிர்ந்து காணப்படும், உச்சந்தலையில் இடி இடிப்பது போல வலி ஏற்படும், சிலேத்தும நாடி மிகுந்து ஓடும் இவ்வகை அறிகுறிகள் காணப்பட்டால் இந்தப் புவியில் ஐந்து நாழிகையில் மரணம் என்று அறிந்துகொள். ( இரண்டரை நாழிகை என்பது - ஒரு மணி நேரத்தைக் குறிக்கும் )

"அறிந்தபின் மமர்ந்து வாத
சிலேத்தும மதிக மாகில்
நிறைந்தோர் வார்த்தை தானும்
நேர்பட வெடிப்பாய் பேசும்
சிறந்திடு முகம்வெளுத்து
மார்ப்பது குடில்போல் சென்றால்
மறந்தனார்க்கடி கைதொண்ணுறா
மளவிலே மரண மெய்யே"


பித்த நாடி அடங்கி வாத சிலேத்தும நாடிகள் அதிகரிக்குமானால், நல்ல மொழிகளைப் பேசும் நிலையில் இருப்பவர் வார்த்தைகள் சீற்றத்தோடு அதாவது கோபமானவையாக இருக்கும், முகம் வெளுக்கும், மார்பானது குழல் போல் குறுகும், இத்தகு அறிகுறிகள் தோன்றினால் தொண்ணூறு நாழிகையில் மரணம் என்று அறிந்துகொள்

கணவன் மனைவி பிரியாத வரம்


பிருங்கி முனிவர் அதி தீவிர சிவ பக்தர். சிவனைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டார். ‘ஆதியும் அந்தமும் இ ல்லாத நாயகன் என் கயிலைநாதன்தான்.

அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்றெல்லாம் உள்ளார்ந்த பக்தியுட ன், ஆலவாய் அழகனை மட்டுமே துதித்து வந்தார். பிற கடவுளர்களை சற்றும் சிந்திக்காத அவருடைய போக்கு, சிலசமயம் அக்கடவுளர்களையே அவமதிக்கும் வகையிலும் அமைந்ததுண்டு.

அப்படி ஒரு நிலைக்கு ஆளானவள் - பார்வதி. கயிலாயத்தில் தன் கணவருடன் அமர்ந்தி ருக்கும்போது, பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னைத் திரும்பியே பார்க்காமல் போவதும் அவளுக்கு மன வருத்தத்தைத் தந்தது.

எப்படியாவது பிருங்கி முனிவரை, தன்னையும் வணங்கச் செய்யவேண்டும் என்று விரும்பிய உமையவள், பெரு மானிடம் நெருங்கி அமர்ந்துகொண்டாள். இப்படி அமர்ந்திருக்கும்போது, தன்னைத் தவிர்த்து இவரை மட்டும் பிருங்கி முனிவரால் எப்படி வலம் வர முடியும்? என்று நினைத்தாள்.

வழக்கம்போல பிருங்கி முனிவர் வந்தார். சிவனோடு உமையவள் நெருங்கி வீற்றிருப்பதைப் பார்த்தார். என்ன செய்வது என்று குழம்பினார். பிறகு தெளிவாகி, ஒரு வண்டாக உருவெடுத்தார். இருவருக்கும் இடையே புகுந்து சிவனை மட்டும் வலம் வந்தார்.

இதைக் கண்டு வெகுண்டாள் தேவி. சக்தியும் சிவனும் ஒன்று என்ற தத்துவம் புரியாமல், தன் தலைவனை மட்டும் வணங்கும் இந்த முனிவரின் ஆணவத்தை அடக்க எண்ணினாள். தன்னை அவமானப்படுத்திய முனிவரின் கால்கள் முடமாகிப் போக சபித்தாள்.

அது உடனே பலித்தது. ஆனாலும், தன் பக்தனை அந்த நிலையிலேயே விட்டுவிட இறைவனுக்கு சம்மதமில்லை. அவரது கால்களை சரிசெய்ததோடு, மூன்றாவதாக ஒரு காலையும் உருவாக்கித் தந்தார். அதோடு ஒரு கோலையும் அளித்து, பிருங்கி முனிவர் ஊன்றிச் செல்லவும் வழி செய்து கொடுத்தார்.

தன் கணவர் முனிவருக்கே ஆதரவாக நடப்பதைப் பார்த்து அன்னை வெகுண்டாள். உடனே, தன்னை அவருடைய முழுமையான அன்புக்கு உரியவளாக ஆக்கிக் கொள்ள தீர்மானித்தாள். அதற்கு தவமே சிறந்த வழி என்று நம்பி, பூலோகத்திற்கு வந்தாள். ஒரு வயல்வெளியைத் தேர்ந்தெடுத்தாள். சிவனை எண்ணி தவமிருந்தாள்.

கடுமையான தவம். அன்னையின் தவக் கடுமையினால் சுற்றி இருந்த மரங்களும், செடிகளும், கொடிகளும் கருகித் தீய்ந்தன. மனம் இளகினார் மகாதேவன். மேலிருந்து இறங்கி வந்தார். உமையவளுக்கு தரிசனம் தந்து அவளை ஆட் கொண்டார். ‘ஒரு நாளும் உமைப் பிரியாத வரம் வேண்டும்’ என்று வேண்டினாள் அன்னை. ‘தந்தேன்’என்றார் மகாதேவன்.

“உங்களைப் ‘பிரியாத’ என்றால் அருகிலேயே இருப்பதல்ல, உடலோடு ஒன்றியதாக... உடலைவிட்டுப் பிரிக்க முடியாதவளாக...” என்று மகாதேவி வரம் கேட்டாள். புரிந்துகொண்டார் பரமன். உடனே அவள் வேண்டிய வரத் தை அளித்தார். அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.

தேவிக்கு சந்தோஷம். இனி பிருங்கி முனிவரல்ல, யாருமே என்னை என் தலைவனிடமிருந்து பிரிக்க முடியாது. சிவன் வேறு, சக்தி வேறு என்று பிரித்துப் பார்ப்பவர்கள், இனி இரண்டும் ஒன்றே என்பதை பரிபூரணமாக உணர வேண் டும் என்று சிவனுடன் சேர்ந்து விதி செய்தாள்.

இவ்வாறு அம்பிகை, இறைவனின் உடலில் ஒரு பாதியாகி, கணவனிடமிருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக் கொண்ட நாள்தான் கேதார கௌரி விரத நாள்.

கேதரம் என்றால் வயல். கௌரி என்ற பார்வதி வயல்வெளியில் தவமிருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றதால் இந்த விரதம் ‘கேதார கௌரி விரதம்’ என்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக தீபாவளி அன்றோ, அல்லது தீபாவளிக்கு மறுநாளே இந்த விரதமும் மேற்கொள்ளப் படுகிறது. தீபாவளித் திருநாள் குடும்பத்தின் மகிழ்ச்சியைக் கூட்டும் நாள்.

கணவன் - மனைவியிடையே மாறாத அன்பை வளர்த்துக் கொள்ள உதவும் பண்டிகை. தான், தன் கணவர், தன் குழந்தைகள், வீட்டிலுள்ள பிற பெரியவர்கள் என்று அனைவரிடையேயும் அன்பும், பாசமும் நீடித்து நிலைக்க வைக்கும் கொண்டாட்டம்.

தம் மாங்கல்ய பலம் நீடிக்கவும், தன் மீதான கணவரின் அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற கேதார கௌரி விரதத்தை சுமங்கலிகள் கடைபிடிக்கிறார்கள்.

அன்றைய தினத்தில், பண்டிகைக்கான பூஜைகளுக்குப் பிறகோ அல்லது முடிந்தால் அதற்கு முன்னதாகவோ, பூஜையறையில் விளக்கேற்றி, சிவபெருமான் படம் அல்லது லிங்கம் அல்லது சிவ - பார்வதி படத்தின் முன் பக்தியுடன் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.

சிவ துதிகளைப் பாட வேண்டும். அம்மன் - சக்தி பாடல் களைப் பாடவேண்டும். ‘ஓம் நமசிவாய, சிவாய நம ஓம், ஓம் நமசிவாய சிவாய நம ஓம்’ என்று பஞ்சாட்சர மந்திரத்தை அன்று முழுவதும் ஓதிக் கொண்டே இருக்க வேண்டும்.

தீபாவளிப் பண்டிகை என்பதால் பட்டினி இருக்க முடியாது. ஆகவே, அன்று எடுத்துக் கொள்ளும் எந்த ஆகாரத்தையும் குறைந்த அளவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

முடிந்தால், சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யலாம். அந்த அபிஷேகப் பாலையே பிரசாதமாக அருந்தலாம், கு டும்பத்தில் பிறருக்கும் கொடுக்கலாம். பாயசம் அல்லது அப்பம் நைவேத்யம் செய்யலாம். தம் கணவர் மற்றும் தம் குடும்ப உறுப்பினர் அனைவரது நலனுக்காகவும் உமையொரு பாகனை வேண்டிக் கொள்ளலாம்.

அதோடு உலகத்தில் உள்ள எல்லா தம்பதியரும் தமக்குள் அன்யோன்யம் பெருக்கி, பிரியாமல் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்வது சிறப்பு.

அச்சுவடியிலிருந்து ஒரு சிறு பகுதி



அச்சுவடியிலிருந்து ஒரு சிறு பகுதி
“ஒரு மூஞ்சூரைப் பிடித்து, அதன் வயிற்றைக் கிழித்து, மசானச் சாம்பலை அதிலே திணித்து, அதற்கு மேலே——— பெண்ணிண் சீலையைத் தூக்கிச் சுத்தி, மயானத்திலே,—– பிணம் வேகுற போது அதிலே வைத்து, வெந்து நீரான அந்தச் சாம்பலை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, தனக்கு வேண்டாதவர்கள் வீட்டுப் பிரப்பிலே —— செய்தால் அந்த வீடு திவால்.”
“அந்த நீரில கொஞ்சம் போல ஊதிப் போட்டு, “சாம்பவி, உமா தேவி, —-, —-, —-, வாமா, தூமா ஓடிவா திவால் என 108 தரம் ஜெபித்து ——– செய்ய அந்த வீடு திவால்”


படிக்கும் போதே சிரிப்பாகவும், வெறுப்பாகவும் இருக்கிறதல்லவா! என்ன செய்ய? அந்தக் காலத்தில் எதிரிகளை அழிக்க இதுபோல பல வழிகளை வைத்திருந்திருக்கின்றனர். ஆனால் தற்காலத்தில் இவை எல்லாம் தேவையில்லை. இதைவிடப் பிரமாதமாக வைரஸ், சிக்கன் குன்யா, பேர்ட் ஃப்ளூ என்று பல நோய்க் கிருமிகளை உருவாக்கியும், இரசாயன, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியும் அப்பாவிகளை, எதிரிகளை அழிக்கும் அளவிற்கு நாம் தாம் முன்னேறி விட்டோமே!.



பழங்கால ஓலைச்சுவடிகளில் மாந்த்ரீகம் பற்றிய பல சுவாரஸ்யமான செய்திகள் உள்ளன. இவையெல்லாம் சுவடிகள் ஆய்வு மையம், சுவடியியல் நிறுவனம் போன்றவற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதுகாறும் பதிப்பிக்கப் பெறவில்லை. இனி இவற்றையெல்லாம் பதிப்பிக்க வேண்டிய அவசியங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. இதைப் பகிர்ந்து கொள்வதன் நோக்கம், இப்படியெல்லாம் இருந்திருக்கின்றது, நம் முன்னோர்கள் இவற்றையெல்லாம் கடந்து வந்திருக்கின்றனர் என்பதைத் தெரிவிக்கவேயன்றி மூட நம்பிக்கைகளை வளர்ப்பதற்கு அல்ல.


இவையெல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் நம் முன்னவர்களில் ஒரு சிலரால் இவையெல்லாம் பயன்பாட்டில் இருந்துள்ளவை என்னும் போது ஆச்சர்யமே எழுகின்றது.
அடிக்கடி கிராமப்புறங்களில் நாம் கேள்விப்படும் செய்தி. திடீர் திடீரெனக் குடிசைகள் தீப்பிடித்து எரிகின்றன. கற்கள் மேலிருந்து விழுகின்றன. ஆடைகள் எல்லாம் திடீர் திடீரெனத் தீப்பிடிக்கின்றன என்பது. சமீபத்தில் விழுப்புரம் அருகே கூட இதே போன்ற ஓர் பிரச்சனை ஏற்பட்டு அது நாளிதழ்களிலும், பத்திரிகை, தொலைக்காட்சிகளிலும் வெளியானது. இதற்குக் காரணம் சாமியாரின் சாபமா? தெய்வத்தின் கோபமா? ஏவலா? செய்வினையா?. இல்லை, விபரீதப் புத்தி படைத்தவர்களின் சதியா? என ஒன்றுமே புரியாமல் மக்களும் அதிகாரிகளும், காவலர்களும் குழம்பி நின்றனர்.




என்ன காரணமாக இருக்கும்? விஞ்ஞானப்படி சாத்தியமில்லாததை எப்படி நிரூபிப்பது?. யாரேனும் வெண் பாஸ்பரஸைக் கொண்டு புத்திசாலித்தனமாக சதி செய்கின்றார்களா?. இல்லை இயற்கைக்கு மாறான சக்தி ஏதேனும் இவ்வாறு ஆட்டி வைக்கின்றதா? இவற்றிற்கெல்லாம் அவ்வளவு எளிதில் விடை காண முடிவதில்லை. இதுவரை இவ்வாறு நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும் சரியான காரண காரியங்கள் கண்டறியப்படவில்லை என்பதுதான் உண்மை.
கிராமத்து மக்களோ “ஒரு சாமியார் வந்தார். யாரும் அவரை மதிக்கலை. திட்டித் துரத்திட்டாங்க. அதான் அவரு சாபம் இட்டுட்டாரு” என நம்ப முடியாத பல மாறுபட்ட தகவல்களைக் கூறுகின்றனர்.




இதுபற்றி ஒரு கதை கூட உண்டு. ஒரு சாமியார் பசிக்காக ஒரு ஊருக்கு வந்திருக்கின்றார். ஊர் மக்களில் சிலர் பிச்சை போடாதது மட்டுமல்லாமல், அவரைப் பலவாறாகக் கிண்டல் செய்தும் விரட்டி அடித்து உள்ளனர். அவர் போகும் பொழுது, இன்னும் பத்து நாள்ல, என் வயிறு எரிய மாதிரி இந்த ஊர் பத்தி எரியும்டா, அப்பத் தெரியும் நான் யாருன்னு என சாபம் விட்டுச் சென்றுள்ளார். அதே போன்று பத்து நாட்கள் கழித்து, ஊரில், வீடுகளில், ஆங்காங்கே தீ. யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் எங்கெங்கோ சுற்றிச் சாமியாரைக் கண்டு பிடித்து, அவரிடம் மன்னிப்புக் கேட்டு, அவருக்கு அந்த ஊரில் காய்த்த இளநீர் குடிக்கக் குடித்த பிறகு தான் தீ எரிவது நின்றதாம்.




இதெல்லாம் சாத்தியமா?… எப்படி இந்த நிகழ்வுகள் ஏற்படுகின்றன.. எப்படி இதனை விளக்குவது?… அது ஏன் ஏழைகள் வசிக்கும் குடிசை போன்றவை மட்டுமே எரிகின்றன. மாடி, ஓட்டு வீடுகள், பணக்காரர்கள் வசிக்கும் இல்லங்கள் எரிவதில்லையே ஏன்? கேள்விகள் எழத்தான் செய்கின்றன.




இவையெல்லாம் சாத்தியம் தானா என்றால் மாந்த்ரீக முறைப்படி இவையெல்லாம் சாத்தியம் தான் என்கிறது ஒரு சுவடி. அதன் பெயரே குடிசை திவால். இன்னமும் பதிப்பிக்கப் படாத அந்த ஏட்டுக்கட்டில் இது போன்ற பல இரகசியங்கள் புதைந்து கிடைக்கின்றன. அவற்றை நாமும் தெரிந்து கொள்வது, இப்படியெல்லாம் கூட உள்ளதா என வியப்புறவோ அல்லது வெறுப்புறவோ அன்றி, வேறெதற்கும் அல்ல.

காயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையருள்





வால்மீகி ராமாயணத்தில் 24,000 சுலோகங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரம் சுலோகங்களுக்கு ஒரு வார்த்தை தேர்ந்தெடுத்து 24 வார்த்தைகளால் காயத்ரீ மந்திரம் உருவாக்கப்பட்டது என்றும் கருதப்படுகிறது. காயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையருள் வழங்கும் ஒவ்வொரு சக்தி உண்டு.


ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ் தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்


இதுவே காயத்ரீ மந்திரம். இந்த காயத்ரீ மந்திரத்தில் முதல் வரியான ஓம் பூர்ப்புவஸ்ஸீவ-இதில் ஓம் என்பது பிரணவம் ஆகும். பூர்ப்புவஸ்ஸீவ என்பது பூலோகம், புவர்லோகம், சொர்க்கலோகம் ஆகும். தத் எனும் இரண்டாவது வரியிலிருந்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு.


தத்- என்ற சொல் தபினி என்ற அம்பிகையைக் குறிக்கிறது. வெற்றியைத் தருபவள்.


ச- என்ற எழுத்து சாமுண்டியை குறிக்கும். இவள் வீரத்தையும், வலிமையையும் அளிப்பாள்.


வி- என்ற எழுத்து விஸ்வா என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் நல்ல பலன்களைத் தருவாள்.


துர்-என்ற சொல் துஷ்டி என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு தருவாள்.


வ-என்ற எழுத்து வரதாம்பிகையைக் குறிக்கும். இவள் யோகத்தினைக் கொடுப்பாள்.


ரே - என்ற எழுத்து ரேவதியைக் குறிக்கிறது. இவள் திருமணம் நடத்தி வைக்கவும், தம்பதியருக்குள் அன்பை உருவாக்கும் தேவியாவாள்.


ணி- எழுத்து சூக்ஷ்மா என்ற அம்பிகை ஆவாள். செல்வம் வழங்குவாள்


யம்- ஞானாம்பிகையைக் குறிக்கும். அழகை அளிப்பாள்.


பர்- கார்கவியைக் குறிக்கும். இவள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாள்.


கோ- கோமதி ஆவாள். இவள் நல்ல அறிவையும், ஞானத்தையும் தருவாள்.


தே- தேவிகாவைக் குறிக்கும். இவள் தீய சக்திகளை அழிப்பாள்


வ- வராகியைக் குறிக்கும். தவயோகம் தருவாள்.


ஸ்ய- சின்ஹனியைக் குறிக்கும். இருப்பதை காக்கும் சக்தி படைத்தவள்.


தீ- தியானாம்பிகையைக் குறிக்கும். இவள் நீண்ட ஆயுளைக் கொடுப்பவள்.


ம - மர்யாதா என்ற அம்பிகை ஆவாள். இவள் புலனடக்கம் அளிப்பாள்.


ஹி- ஸ்புட நாயகியைக் குறிக்கிறது. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் சக்தி கொண்டவள்.


தி- மேதா அம்பிகையைக் குறிக்கிறது. இவள் வருங்காலத்தை உணர்த்துவாள்


யோ- யோகமாயா ஆவாள். விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவாள்.


யோன- யோனியைக் குறிக்கும். உணவு உற்பத்தியையும், விவசாய விருத்தியையும் கவனிப்பாள்.


நஹ்- தாரணியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு அளிப்பாள்.


ப்ர்- ப்ரபவா என்ற அம்பிகை ஆவாள். குறிக்கோளை அடைய உதவுவாள்.


சோ- ஊஷ்மா தேவியைக் குறிக்கும். இவள் அச்சத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பாள்.


த்- த்ரஷ்யா என்ற அம்பிகை ஆவாள். இவள் நல்லறிவு, விவேகம் தருவாள்.


யாத்- நிரஞ்சனா தேவியைக் குறிக்கும். இவள் தொண்டு செய்யும் மனதை தருவாள்.


ஆவணித் திங்கள் 14ம் நாள் காயத்ரீ ஜெபத்திற்கு தகுந்த நாள். அன்று இந்த மகத்தான மந்திரத்தை ஜபித்து அனைவரும் பலன் பெறலாம்