கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

கோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்




வராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள்.
இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு
பன்றிகள் இழுக்கும்} ரதமாகும்

இவளுக்கு பல நாமங்கள் உள்ளன சேனநாதா , தண்டநாதா, வராஹி, பஞ்சமீ, கைவல்யரூபி , வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி( நீதி தேவதை - ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி(வடிவம்), பலிதேவதா ,ஸங்கேதா , ஸமயேஸ்வரி ,மகாசேனா , அரிக்னீ, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரீ.


வராஹி ஸ்வரூபத்தில் ஸ்வப்ன வராஹி , அஷ்வாரூட வராஹி, ஆதி வராஹி , லகு வராஹி என பல உள்ளன. அவள் பல வண்ண உடைகள் அணிபவள் { ஒவ்வொரு வராஹியும் நீலம், சிவப்பு , மஞ்சள் என்று பல உடைகள் , பல ஆயுதங்கள்


வராஹம் என்றால் என்ன? பன்றி தானே , வராஹ மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வராஹி தான் . என்ன உதவி தெரியுமா ??
பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன மூக்கி நுனியில் {அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி} வைக்க வேண்டும் ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை {இயற்கையை} மாற்ற முடியாதல்லவா . ஆக அந்த உந்துதலுக்கு{உயர்த்துதலக்கு} உதவியவள் தான் வராஹி . ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.



சரி அங்கே உந்துதல் , தூக்கி உயர்த்துதல் எல்லாம் சரி , நாம் மக்கள் ஏன் அவளை வணங்க வேண்டும் ? நம்முடைய எதை அன்னை உயரத்தி தூக்க வேண்டும்??என்றால் பணமா, புகழா, அந்தஸ்தா என்றால் இல்லை அதற்கான விடை தான் மிக மிக நுட்பமானது. ஆம் நம்முடைய குண்டலினியை{ உயிர் சக்தியை } உயர்த்துபவளே வராஹி



இன்னும் இருக்கிறதே அன்னையின் சூட்சம வடிவத்தின் ரகசியம். அவள் கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை கலப்பையும்{ஏர்} மற்றும் தண்டம் ? கலப்பையின் வேலை என்ன மண்ணின் அடியில் {ஆழத்தில்} இருப்பதை எடுப்பதற்கு தானே , கிழங்கு முதலானவை எடுக்க, நிலத்தை சீர் செய்ய, அது போல் நாம் பாவம் செய்ய செய்ய அவை பதிவுகளாகி {இப்பிறவி என்று இல்லை கர்ம பயன்களும்- வினைப்பயன்} என கர்ம மணல்பரப்பின் உள்ளே ஆழத்தில் உள்ள கிழங்கான குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை.
எழுந்த குண்டலினி மேல் வரவேண்டுமே அதற்கு தான் அதை தட்டி உயர்த்த கோல்{ தண்டம்} ஏந்தியவள் அன்னை ..
அன்னை லலிதையின் பிருஷ்ட{பின் } பாகத்தில் இருந்து தோன்றியவளாம். ஆம் மூலாதாரம் இருக்கும் இடம்,
ஆக சரி தானே அன்னையின் வடிவமும், அமைப்பும் ஆயுதங்களும்.
சரி குண்டலினி மேலேழுந்தால் என்ன லாபம் ? என்றால் உண்மையாக குண்டலினியை ஆக்கினையில் வைத்து தவம் செய்ய செய்ய எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும் {வராஹி வழிபட்டால் வாக்கு பலிதம் நிகழும்} , எதிரிகள் குறைவார்கள்{அவர்களும் நம் நண்பர்களாகி விடுவர் – வராஹி வழிபாடு எதிரிகளை வெல்லுவது} ஆம் இதற்கு பெயர் தான் அன்பால் வெல்லுவது. மேலும் குண்டலினி உயர்ந்தால் உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது




வராஹிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்.




இப்படி வராஹி வழிபாட்டின் பலன் தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
ஆனால் ஒரு விஷயம் வராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.



ஆனால் வராஹி துடியானவள். கூப்பிட்ட குரலுக்கு வருவாள்.



வராஹி காயத்திரி


ஓம் ஸ்யாமளாயே வித்மஹேஹல ஹஸ்தாய
தீமஹிதன்னோ வராஹி ப்ரசோதயாத்


மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை , எப்போதும் ஜெபியுங்கள் . அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம்


ஸ்ரீ வாராஹி அம்மன் துதி

ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!





தியான சுலோகம்

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:


வராஹி மூல மந்திரம்
1)
ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

2)
ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

3)
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:



4) செல்வம் பெருக
ஓம் - ஸ்ரீம் - ஹ்ரீம் - க்லீம் - வாராஹி தேவியை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் - ஸித்திஸ்வரூபிணி - ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.


மூலம்:-
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா II

காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்



ஸ்ரீ வாராஹி மாலை


1. வசீகரணம் (தியானம்)


இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.


2. காட்சி (யந்த்ர ஆவாஹனம்)


தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ்இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.


3. பகை தடுப்பு (பிரதாபம்)


மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி


வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்


பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.






4. மயக்கு (தண்டினி தியானம்)








படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.






5. வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)






நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்


கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே.


6. உச்சாடணம் (ரோகஹரம்)


வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே.


7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)


நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே.


8. பெரு வச்யம் (திரிகாலஞானம்)


வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.


9. பகை முடிப்பு (வித்வேஷணம்)


வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம்எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.


10. வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)


பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.


11. தேவி வருகை (பூதபந்தனம்)


எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.


12. ஆத்மபூஜை (மஹாமாரி பஜனம்)


சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே


13. தேவிதாபனம் (பில்லி மாரணம்)


நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.


14. மந்திரபூஜை (முனிமாரணம்)


மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த் தெய்வமே.


15. வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)


ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே


16. வரம் பொழிதல் (எதிரி மாரணம்)


தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!


17. வாழ்த்துதல் (உலக மாரணம்)


வருந்துணை என்று வாராஹிஎன்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.


18. நன்னீர் வழங்கல் (ஏவல் பந்தனம்)


வேறாக்கும் நெஞ்சும் வினையும்வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.


19. புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)


பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள்எங்கள் அம்பிகையே.


20. மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)


தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.


21. தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)


ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர்<<உடலும் கூராகும் வாளுக் கிரைஇடுவாள்கொன்றை வேணிஅரன் சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள் வாராஹி வந்து குடிஇருந்தாள்என்னை வாழ்விக்கவே. 22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்) தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப் பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே 23. புகழ்சொற்பாமாலை (மௌனானந்த யோகம்) ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல்ஆழி உண்டு காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉ<ண்டே. 24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்) உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம் வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள் இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும் விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே. 25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்) தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல் வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு) அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே. 26. படைநேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்) அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால் கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித் தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர் நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே. 27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்) சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய் நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப் புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே. 28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்) பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து) இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை நெருப்புக் குவால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே. 29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்) தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால் மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே. 30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்) நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான் அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே ஸரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையைவெட்டி எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும்தெய்வமே. 31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்) வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம் பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில் கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே. 32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்) சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல் தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.
வாராஹி ஸ்ரீ சக்கரத்தில் நாலு வித படைகளுக்கும் சேனாதிபதி ஆவாள். இவள் தீமை செய்பவரை கண்டித்து அடக்குவதால் தண்டினி என்று பெயர்

வாராஹி ஸ்ரீ சக்கரத்தில் நாலு வித படைகளுக்கும் சேனாதிபதி ஆவாள். இவள் தீமை செய்பவரை கண்டித்து அடக்குவதால் தண்டினி என்று பெயர்


இவளுடைய சக்ரத்திற்கு கிரி சக்கரம் என்று பெயர். கிரி – கிரணங்கள் அதாவது சிருஷ்டி, ஸ்திதி, லயம் இவைகளுடைய சக்கரம்.



இவளது பன்னிரண்டு நாமங்கள்:


பஞ்சமீ
தண்டநாதா
ஸங்கேதா
ஸமயேஸ்வரீ
ஸமயஸங்கேதா
வாராஹி
போத்ரிணீ
சிவா
வார்த்தாளி
மகாசேனா
ஆஞ்ஜா சக்ரேஸ்வரி
அரிக்னி